கீழாநிலையில் 32 மி.மீ மழைப்பதிவு :

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மாயனூர், அணைப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரத்தில்) பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 25, கிருஷ்ணராயபுரம் 8.20, மாயனூர், அணைப்பாளையம் தலா 4.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை ஒரு நாளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): கீழாநிலை 32, மீமிசல் 25, நாகுடி 18, அறந்தாங்கி 17, புதுக்கோட்டை 15, திருமயம், பெருங்களூர் தலா 7, ஆயிங்குடி 4, ஆதனக்கோட்டை 2.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE