நெல் கொள்முதல் செய்யக் கோரி - விளாகத்தில் விவசாயிகள் சாலை மறியல் :

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கூறி, அப்பகுதி விவசாயிகள் நேற்று இரவு விளாகம்- ஆலம்பாடி சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், நெல்மணிகள் காய்ந்து, தன்மை மாறிவிடும். மேலும், 20 நாட்களாக திறந்தவெளியில் நெல்மணிகள் கிடப்பதால், ஆடு, மாடுகள், பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE