சாலை விபத்தில் கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் காயம் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி தனி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஐ.மணிரத்தினம் நேற்று உளுந்தூர் பேட்டையில் இருந்து கள்ளக் குறிச்சி பகுதிக்கு பிரச்சாரத்திற்காக காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தியாகதுருகம் அருகே சின்னமாம்பட்டு கிராமப்பகுதியில் முதியவர் ஒருவர்சாலையை கடக்க முயற்சித்துள் ளார். அவர் மீது கார் மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். சாலையோரத் தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் மோதிவிபத்துக் குள்ளானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம், அவ ரது மகன் அரவிந்தன், அவரது உதவியாளர் திருநாவுக்கரசு, ஓட்டுநர் கவுதமன் ஆகியோர் காய மடைந்தனர். இதையடுத்து நால்வரும் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைசி நேரப் பிரச்சாரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற மணி ரத்னம் விபத்துக்குள்ளானது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE