ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு - தேர்தல் பார்வையாளர்கள் வருகை : விதிமீறல் புகார்களை தெரிவிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர் மற்றும் காவல் பார்வையாளரிடம் தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலை நியாயமாகவும், நடுநிலையாகவும் நடைபெற ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர், தேர்தல் காவல் பார்வையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மாவட்டத்துக்கு வந்துள்ள நிலையில், மாவட்டத்துக்கான காவல் தேர்தல் பார்வையாளர் தினேஷ் குமார் யாதவ், தக்கோலம் சிஐஎஸ்எப் பயிற்சி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை, 94987-47560 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்துக்கான தேர்தல் செலவின பார்வையாளர் எம்.ஜெ.சேத்தன் ராணிப்பேட்டை பெல் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை, 94987-47559 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல், 4 தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் பெல் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். அரக்கோணம் (தனி) மற்றும் சோளிங்கர் தொகுதிக்கு ரா.கிரிஜா (94987-47561), ராணிப்பேட்டை தொகுதிக்கு அருண் கே.விஜயன் (94987-47562), ஆற்காடு தொகுதிக்கு ஜெரோமிக் ஜார்ஜ் (94987-47563) ஆகியோரை தொடர்பு கொண்டு தேர்தல் விதி மீறல்கள் குறித்து புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்