வேட்பாளர்களை மாற்றக் கோரி அதிமுகவினர் மறியல் :

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த ஜனவரி மாதம் அதிமுகவில் சேர்ந்தவர் தர்ம.தங்கவேல். இவரை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை மாற்றக் கோரியும் அதிமுகவினர் திரளானோர் நேற்று ஆலங் குடியில் பேரணியாக சென்று பேருந்து நிலையத்தில் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

அப்போது, தர்ம.தங்கவேலை வேட்பாளராக பரிந்துரைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கரை கண்டித்தும் முழக்கமிட்டனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி புளிச்சங்காடு கைகாட்டியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல, அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ மு.ராஜநாயகத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவைச் சேர்ந்தோர் நேற்று அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரசுக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்தி ரனை மாற்றக் கோரி, திருமானூரில் நேற்று அக்கட்சியினர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதைக் கண் டித்து அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்குசாலையில் நேற்று மறி யலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ இந்திராகாந்தியை மாற் றக் கோரி துறையூர் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் போட்டியிட மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் சண்முகபிரபுவுக்கு வாய்ப்பளிக்காததைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE