வருவாய்த் துறையினர் வேலைநிறுத்தம்

மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு வரு வாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7-வது நாளான நேற்று மாவட்டச் செயலாளர் ஜெயவேல்காந்தன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE