நாமக்கல் அருகே புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செல்லப்பம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி, தத்தாத்திரிபுரம் உயர்நிலைப்பள்ளி, மின்னாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கரையான்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பாப்பி நாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புதிதாக ஏற்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, வயதானவர்கள், மாற்றுத் திறனாளி களுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவைகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தார். அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச் சாவடிகளில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஆட்சியர் உத்தரவிட்டார்.