நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரம் செண்பகமாதேவி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்குமார் (36). சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் நேற்று முன்தினம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை கேட்டு நேற்று முன்தினம் அசோக்குமாரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். நேற்றும் பிரேதபரிசோதனை அறிக்கையை உறவினர்களிடம் தராததால், இரண்டாவது நாளாக அசோக்குமாரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.