கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தை விவசாயிகள் நேற்ரு முற்றுகையிட்டனர்.

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 37 பேர் கடந்த வாரத்தில் கடன் பெற்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு உரங்கள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், பணம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், முதல்வர் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததாக அறிவித்ததை அடுத்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்கள் பட்டியலில் 37 பேரின் பெயர் இடம் பெறவில்லை.

இதனால், தங்களுக்கான கடன் தொகையை வழங்குவதுடன், தள்ளுபடி பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கத்தை 37 விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வாங்கல் போலீஸார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்