ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தர விட்டுள்ளார்.

சோளிங்கர் வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், வாலாஜா வட்டாட்சியராகவும், அங்கு வட்டாட்சியராக பணியாற்றி வந்த பாக்கியநாதன், நெமிலி வட்டம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம், சிப்காட், பனப்பாக்கம் திட்டம் நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுமதி, நெமிலி வட்டாட்சியராகவும், அங்கு வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராஜராஜசோழன், சோளிங்கர் வட்டம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெமிலி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கந்திற்பாவை, அரக்கோணம், சிப்காட், பனப்பாக்கம் திட்டம் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், கலவை வட்டம் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வசந்தி, ராணிப்பேட்டை நத்தம் நகர நிலவரித் திட்டம் தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்