திரூரில் நாளை காளான் வளர்ப்பு பயிற்சி

திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாளை (பிப். 4) காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் செயல்படுகிறது. இந்நிலையத்தில் நாளை (பிப்.4) காளான் வளர்ப்பு குறித்து, விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கான கட்டணம் ரூ.500. பங்கேற்பாளர்களுக்குபயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், திரூர் வேளாண்மை அறிவியல் நிலையபேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளரை (போன் எண்: 044-27620705 / 9884876883) தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE