தேசிய ஆடை வடிவமைப்பு போட்டியில் மடிப்பாக்கம் சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான நவீன ஆடை வடிவமைப்பு போட்டியில் சென்னை மடிப்பாக்கம் சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக சாய்ராம் கல்விக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் இளைஞர் நலன், விளையாட்டு துறைகள் இணைந்து ‘தேசிய இளைஞர் விழா - 2021’ நடத்தப்பட்டது. இதில் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அவர்களில், நவீன ஆடை வடிவமைப்பு பிரிவில் (தீம் அடிப்படையில்) ஐஸ்வர்யா ராணி, ஆகாஷ் கண்ணா ஆகியோர் 2-ம் நிலை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைவரும், முதன்மை நிர்வாக அதிகாரியுமான சாய் பிரகாஷ் லியோமுத்து, பள்ளிப் படிப்பு மட்டுமின்றி, பிற துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி, ‘முயன்றால் முடியாதது ஏதும் இல்லை’ என்ற மந்திரச் சொற்களை வலியுறுத்தி, வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE