கரூரில் 36-வது தேசிய புத்தகக் கண்காட்சி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரூரில் 36-வது தேசிய புத்தகக் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

புதுடெல்லி நேஷனல் புக் டிரஸ்ட், திருச்சி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் கரூர் திருக்குறள் பேரவை இணைந்து நடத்தும் 36-வது தேசிய புத்தகக் கண்காட்சி கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜன.23-ம் தேதி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. நாள்தோறும் காலை 9.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். இதில், அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE