புத்தாண்டை பொது இடங்களில் கொண்டாட ராமநாதபுரம் காவல்துறை தடை

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச. 31 மாலை முதலே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு, பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்திலும் புத்தாண்டை முன்னிட்டு, பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும், கூட்டமாகக் கூடிக் கொண்டாடவும் அனுமதி இல்லை.

மாவட்டத்தில் ராமேசுவரம், அரியமான் உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடவோ, கூட்டமாகக் கூடி நிற்கவோ கூடாது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், பொதுமக்கள் அரசு விதிமுறையைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE