தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புற நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிகள் அம லில் இருக்கும்போது கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கத்தின் 5-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகையா தலைமை வகித்தார். பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம் பேசியதாவது:

கடந்த 2018-ல் கஜா புயல், 2019-ல் மக்களவைத் தேர்தல், நிகழாண்டு கரோனா பாதிப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகளாக நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த முடியாமல் கலைஞர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 3.50 லட்சம் கலைஞர்களில், கலைப் பண் பாட்டுத் துறையின் மூலம் நலவாரி யத்தில் பதிவு செய்த 34 ஆயிரம் பேருக்கு மட்டுமே கஜா புயலின் போது தலா ரூ.2,000, கரோனா பாதிப்புக்காக தலா ரூ.2,000 நிவாரணமாக அரசு வழங்கியது.

மொத்த கலைஞர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.எனவே, விடுபட்டுள்ள அனைவரை யும் நலவாரியத்தில் சேர்க்க தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

மேலும், 2021-ல் தமிழகத்தில் கோயில்களில் திருவிழா நடை பெறும் சமயத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலுக்கு வந் தால் கலை நிகழ்ச்சிகளை நடத்து வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக் கப்படும்.

ஏற்கெனவே 3 ஆண்டுகளாக நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது திருவிழாக்களில் இரவு ஒரு மணிவரை கலை நிகழ்ச்சி நடத்து வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE