திருச்சி அருகே தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

திருச்சி அருகே கடன் நெருக்கடி யில் தற்கொலைக்கு முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் பலராமன்(75). இவரது மனைவி புஷ்பா(73). இவர்களது மகன் ஹரி(38). இவர்கள் தாராபுரத் தில் நகைக்கடை, பைனான்ஸ், தானிய விற்பனை மண்டி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை சமாளிக்க பலராமனும், அவரது மகன் ஹரியும் பலரிடம் கடன் பெற்றுள்ளனர். உரிய நேரத்தில் அதை திருப்பிக் கொடுக்க முடியாததால் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தனர்.

இந்நிலையில் பலராமன், மனைவி புஷ்பா, மகன் ஹரி, மருமகள் திவ்யா(34), பேரன் அசோக் ராதா(8) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூரிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்று அறை எடுத் துத் தங்கினர். அதிகாலையில் 2 மணியளவில் இவர்களது அறை யிலிருந்து சத்தம் கேட்டதால், விடுதிப் பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பலராமன் உள்ளிட்ட 5 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது.

உடனடியாக அனைவரையும் மீட்டு ரங்கம் அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வாத்தலை போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினை காரணமாக தற் கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்