வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

திருச்சி கே.கே நகர் அருகேயுள்ள கே.சாத்தனூர் காவல்காரர் தெரு வைச் சேர்ந்தவர் சிவக்குமார். கட்டுமான தொழிலாளியான இவர், மண் சுவராலான குடிசை வீட்டில் வசித்து வருகிறார். தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இவரது வீட்டின் ஒரு பக்கச் சுவர் பலமிழந்து நேற்று மாலை இடிந்து விழுந்தது.

அப்போது, அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சிவகுமா ரின் இரண்டரை வயது மகன் ஹரிகிருஷ்ணன் மீது சுவர் விழுந்ததில், சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி இறந்தார். தகவலறிந்த கே.கே நகர் போலீஸார் அங்கு சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்