அரசின் திட்டங்களை விளக்கி வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் அதிமுகவினருக்கு வைத்திலிங்கம் எம்.பி அறிவுறுத்தல்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வுக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக மகளிர் குழு தொடக்க விழா மற்றும் பூத் கமிட்டி கையேடுகள் வழங்கும் விழா திருச்சி மன்னார்புரத்தில் நேற்று நடைபெற்றது.

மாநகர் மாவட்டப் பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்ச ருமான வெல்லமண்டி என்.நட ராஜன் பேசும்போது, ‘‘திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் அய ராது பாடுபட வேண்டும்’’ என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக துணை ஒருங்கி ணைப்பாளரும், மண்டல பொறுப் பாளருமான வைத்திலிங்கம் எம்.பி, பூத் கமிட்டி கையேடுகளை வழங்கி, அதிமுகவினருக்கு தேர்தல் பணி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது:

சட்டப்பேரவை தேர்தல் தேதியை வரும் மார்ச் 1-ம் தேதியன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அதிமுகவினர் அனைவரும் தேர்தல் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கான களம் அமைக்க வேண்டும். தங்களது பகுதியில் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அரசின் நல்ல திட்டங்களை எடுத்துக் கூறி, அதிமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, மாநகர் மாவட்ட அணி நிர்வாகிகள் பத்மநாபன், தமிழரசி, ராஜ்குமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்