திருச்சி, பெரம்பலூரில் திமுக தேர்தல் அறிக்கை கருத்துக் கேட்பு கூட்டம்

திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக பல்வேறு அமைப்புகள், பொது மக்களிடமிருந்து கருத்துக் கேட்பு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவா லயத்தில் நேற்று நடைபெற்றது.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை வகித் தார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமையில் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரிடம் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், சுயஉதவிக் குழு வினர், கட்டிடத் தொழிலாளர் கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை களை மனுக்களாக அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல பெரம்பலூரில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களைச் சேர்ந்தவர்களிடம் மனுக்களை பெற்றனர்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள் குன்னம் சி.ராஜேந் தின், எஸ்.எஸ்.சிவசங்கர், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.ந.அ. பெரு நற்கிள்ளி, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்ல பன், வி.எஸ்.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE