டெல்டாவில் 40 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி உறுதி முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கருத்து

திமுக இளைஞரணிச் செயலா ளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தேவராயநேரி பகுதியில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக கொடியை ஏற்றிவைத்து அக்கட்சியின் முதன்மைச் செயலா ளர் கே.என்.நேரு பேசியதாவது:

டெல்டா பகுதிகளில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து வருகிறார். மேற்கு மாவட்டங்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என அதிமுகவினர் மார் தட்டுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.

இதுதவிர சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார்.

ஆலோசனைக் கூட்டம்

திருச்சி கலைஞர் அறிவால யத்தில் திமுக சட்டத்துறையின் மேற்கு மற்றும் மத்திய மண்டல வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டடம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.என்.நேரு தலைமை வகித்துப் பேசினார். இதில் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ரகுபதி (புதுகை தெற்கு), செல்ல பாண்டியன் (புதுகை வடக்கு), வைரமணி (திருச்சி மத்திய) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்