‘நிவர்’ புயலால் ரயில் சேவையில் மாற்றம்

நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பல்வேறு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வண்டி எண்:06865/ 06866 சென்னை எழும்பூர்- தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண்:06795/ 06796 சென்னை எழும்பூர்- திருச்சி- சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியன நவ.24, 25-ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

அதேபோல, மைசூரு- மயிலாடுதுறை சிறப்பு ரயில் சேவை திருச்சி- மயிலாடு துறை இடையேயும், எர்ணாகுளம்- காரைக்கால் சிறப்பு ரயில் சேவை திருச்சி- காரைக்கால் இடையேயும் நவ.24-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களின் சேவை மறு வழித்தடத்தில் நவ.25-ம் தேதி மயிலாடுதுறை- திருச்சி இடையேயும், காரைக்கால்- திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மயிலாடுதுறை- கோவை- மயிலாடுதுறை சிறப்பு ரயில் திருச்சி- மயிலாடுதுறை- திருச்சி இடையே நவ.25-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்