சேந்தமங்கலம் காவல் நிலையம் எதிரில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional01

சேந்தமங்கலம் காவல் நிலையம் எதிரில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகலாதன். இவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேந்தமங்கலம் காளப்பநாயக்கன்பட்டி வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந் தார். காளப்பநாயக்கன்பட்டி அருகே பட்டத்தையன்குட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த பேருந்தின் பின்புறம் பிரகலாதன் சென்ற இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பிரகலாதன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சிவக்குமார் (37) மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையறிந்த பேருந்து நடத்துநர் மற்றும் போக்கு வரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள், சேந்தமங்கலம் காவல் நிலையம் எதிரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறையினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத் தினர் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT