மும்மதத்தினரும் பங்கேற்ற நல்லிணக்க தீபாவளி

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவிரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நல்லிணக்க தீபத் திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமையில் சங்கச் செயலாளர் செந்தில்குமார், எஸ்ஐடி முதல்வர்(பொ) விஜயகுமார், பேராசிரியர் முகமது காசிம், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சத்யவாகீஸ்வரன் உள்ளிட்டோர், அப்பகுதியிலுள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரின் வீடுகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

மேலும் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நபர்கள், அங்குள்ள சுந்தர விநாயகர் கோயிலின் குருக்கள் உட்பட பல இந்துக்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். இனிவரும் நாட்களில் கிறிஸ்துமஸ், பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளை அனைவரும் சேர்ந்தே கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதேபோல, தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் தங்கள் வீடுகளின் முன் குவிந்த குப்பையை இப்பகுதி மக்கள் தாங்களாகவே அகற்றி, தெருக்களை தூய்மைப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்