ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. நவ.20-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஊஞ்சல் உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ரங்க நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு இரவு 7 மணி முதல் 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

பின்னர், 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூலவர் சேவை கிடையாது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்