திருச்சியில் காவலர் தற்கொலை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நத்தமாங்குடி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் நவநீதகிருஷ்ணன்(24). திருச்சி மாநகர காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்த இவர், கே.கே.நகரிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த அக். 16-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்றவர், மீண்டும் பணியில் சேராமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் காவலர் குடியிருப்பிலுள்ள தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினை காரணமாக நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்