மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஆட்சியாளர்களை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்டிகை பஜார் இயக்கம் எனும் பெயரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஈ.வளர்மதிதலைமை வகித்தார். கரோனா காலத்தில் ஏழை, எளிய மக்கள் வேலை, வருமானம் இழந்து தவிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதுடன், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ரா, பொருளாளர் ஷகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்