சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த கலியன் மகன் பால முருகன்(32). இவர் கடந்த 29-ம் தேதி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை வலுக் கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத் தியுள்ளார். பாதிக்கப்பட்ட அச்சிறுமி, வீட்டுக் குச்சென்று நடந்த நிகழ்வுகள் குறித்து பெற்றோரிடம் கூறியுள் ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், லால்குடி டிஎஸ்பி ராதாகிருஷ் ணன், இன்ஸ்பெக்டர் பழனியம் மாள் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரித்தனர். பின்னர், இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். உடல் நிலை பாதிக் கப்பட்ட அந்த சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியைச் சேர்ந்தவர் பி.சின்னையா(73). இவர், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்