அரை மணி நேரத்தில் 3 லட்சம் சர்வ தரிசன டோக்கன் முன்பதிவு :

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனம் செய்வதற்கான சர்வ தரிசன டோக்கன்களை, கரோனா அச்சுறுத்தல் கருதி, ஆன்லைனில் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

அதன்படி நவம்பர் மாத சர்வ தரிசன டோக்கன் களை தேவஸ்தானம் இணையதளத் தில் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டது. இதில் 30 நாட்களுக்கு 3 லட்சம் டோக்கன் கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் வெறும் அரை மணி நேரத்தில் 3 லட்சம் டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டன.

நாளை முன் பதிவு செய்த பக்தர்கள் திருமலை யில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்