காஷ்மீரில் அண்மைக்காலமாக அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று குல்காம் மாவட்டத்தில் 2 தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் 2 பேரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இறந்தவர்களில் ஒருவர் பிஹாரைச் சேர்ந்த தள்ளுவண்டியில் உணவுக் கடை நடத்தி வந்தவர் என்பதும், மற்றொருவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago