சமந்தா கோபம் :

‘திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை சமந்தா, சில படங்களை ஒப்புக்கொண்டதால் கணவர் நாக சைதன்யாவுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்’ என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. இருவரும் தனித்தனியே வசிப்பதாகவும் தெலுங்கு திரைப்பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு-கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜை செய்து வழிபட்ட சமந்தா, 18-ம் தேதி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

சமந்தா வந்ததை அறிந்த ஊடகத்தினர் கோயில் முன்பு திரண்டிருந்தனர். அவர்களை தவிர்க்க முயன்ற சமந்தாவிடம் செய்தியாளர்கள், ‘‘நாக சைதன்யாவுக்கும். உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டீர்களா?’’ என்றனர்.‘‘சாமி கும்பிட வந்த இடத்தில் இப்படி கேட்கலாமா’’ என்று கோபத்துடன் கேட்டுவிட்டு, காரில் ஏறிச் சென்றார் சமந்தா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE