தமிழகத்தில் புதிதாக 1,580 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் புதிதாக 1,580பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள்906, பெண்கள் 674 என மொத்தம் 1,580 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 204,சென்னையில் 185, ஈரோட்டில் 137, தஞ்சாவூரில் 109, செங்கல்பட்டில் 105 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

22 பேர் உயிரிழப்பு

தமிழகம் முழுவதும் 16,522பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 22 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 6பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,190 ஆக உயர்ந்துள்ளது என்றுதமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE