தமிழகத்துக்கு 21-ம் தேதி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் தமிழக சிறப்பு சட்டம்-ஒழுங்கு டிஜிபி ராஜேஷ்தாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மேலும், சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யப் பட்டுள்ளது. அமித்ஷா தங்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றை ஒருநாள் முன்னதாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நேற்று நடைபெற்ற தமிழக சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.