அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும்... - வருமான வரி சோதனை பற்றி நடிகர் சோனு சூட் விளக்கம் :

என்னுடைய அறக்கட்டளையில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் விலை மதிப்பற்ற உயிரைக் காப்பற்ற காத்திருக்கிறது என வருமான வரி சோதனை பற்றி இந்தி நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமாக மும்பையில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.20 கோடிக்கு மேல் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சோனு சூட் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்னுடைய அறக்கட்டளை யில் உள்ள ஒவ்வொரு ரூபாயும்விலை மதிப்பற்ற உயிரைக் காப்பற்றவும் தேவையானவர்களுக்கு உதவவும் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் பல நேரங்களில்,விளம்பரங்களில் தோன்றுவதற்காக எனக்கு வழங்கப்படும் கட்டணத்தை மனிதாபிமான செயல்களுக்கு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

சில விருந்தினர்களை சந்திப்பதில் கவனம் செலுத்தியதால் கடந்த 4 நாட்களாக என்னால் சேவையில் ஈடுபட முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் சேவை செய்வதற்காக இன்று மீண்டும் திரும்பி வந்துள்ளேன்.

எப்போதும் உங்கள் (வருமான வரித் துறை) தரப்பு கதைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. காலம் பதில் சொல்லும். ஒவ்வொரு இந்தியனின் நல்லெண்ணங்கள் மூலம் மிகக் கடினமான பாதைகள் கூட சுலபமானதாகவே தோன்றும். இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE