மகாவீரர் ஜெயந்தி, மே தினம் மதுக்கடைகளுக்கு விடுமுறை :

தருமபுரி மாவட்டத்தில், வரும் 25 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் 25-ம் தேதி மகாவீரர் ஜெயந்தி தினம். அதேபோல, மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம். இந்த இரு நாட்களிலும் தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மது அருந்தகங்கள், மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி, அவ்விரு தினங்களிலும் யாரேனும் மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE