வரி செலுத்துவோருக்காக சிறப்பு மொபைல் செயலியை அறிமுகம் செய்த வருமான வரித் துறை

By செய்திப்பிரிவு

புது டெல்லி: 'AIS for Taxpayers' எனும் மொபைல் போன் செயலியை இந்திய வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (டிஐஎஸ்) போன்ற விவரங்களை வரி செலுத்துவோர் இதில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தரப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலியில் வரி செலுத்துவோருக்கு விரிவான தகவல் வழங்கப்படுவதாக தெரிகிறது.

வரி செலுத்துவோர் தங்கள் டிடிஎஸ்/டிசிஎஸ், வட்டி, டிவிடெண்ட், பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் வருமான வரியை திரும்பப் பெறுதல் (டேக்ஸ் ரிட்டர்ன்) தொடர்பான தகவல்களை எளிதாக இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என வருமான வரித்து றை தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோருக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் நோக்கில் எளிய முறையில் இந்த செயலி வழங்கும் என்றும் தெரிகிறது. இந்தச் செயலியை பயன்படுத்துவது எப்படி?

செயலியின் அம்சங்கள் என்ன?

ஆண்ட்ராய்டு செயலி லிங்க்..
ஆப்பிள் ஐ போன் செயலி லிங்க்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE