ஆர்கானிக் பேட்டரி

By செய்திப்பிரிவு

தாய்வான் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுங்பின் லயோ, ஆர்கானிக் பேட்டரியை உருவாக்கியுள்ளார். இந்த பேட்டரியில் தண்ணீர் உள்பட எத்தகைய திரவத்தை ஊற்றினாலும் அது மின்னுற்பத்தி செய்யும். 10 விநாடிகளில் இது சார்ஜ் ஆகும். இதில் சேமிக்கப்பட்ட மின்சாரம் 2 நாளைக்கு நிலைத்து நிற்கும். இதில் ஊற்றப்படும் திரவத்தின் தன்மைக்கேற்ப மின்சாரம் நிலைத்து நிற்கும்.

இதில் குளிர்பானத்தையும் ஊற்றலாம். வழக்கமாக புழக்கத்தில் உள்ள பேட்டரிகளைக் காட்டிலும் பாதியளவு மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், இந்த ஆர்கானிக் பேட்டரி, பிற பேட்டரிகள் சேமிக்கும் மின்சார அளவைக் காட்டிலும் கூடுதலாக சேமிக்கும் ஆற்றல் பெற்றது. இதில் மின்னுற்பத்தி செய்வது மிகவும் சிக்கனமானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE