திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்களுடன் ஆலோசனை: காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் மே 14-ம் தேதி (இன்று) காலை 11 மணியளவில் காணொலி காட்சிமூலமாக நடைபெறும். இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் அதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. கடந்தமாதம் நடந்த தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை பணியைதீவிரப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி ஒருதொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றவேண்டு மென்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE