கும்பகோணம்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் காங்கிரஸார் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
அதேபோல் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையொட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமை வகித்து, பட்டாசுகளை வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். இதில் மேயர் க.சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.தியாகராஜன், கே.செந்தில்நாதன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
» “கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு பெருத்த அடி” - கே.பாலகிருஷ்ணன் கருத்து
» “இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்.... ” - சித்தராமையா பேட்டி