சென்னை: அகில இந்திய வானொலிக்கு பதிலாக ஆகாஷ்வாணி என்று உத்தரவை திரும்ப பெறக்கோரி மத்திய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.
அகில இந்திய வானொலியின் அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அலுவல் சார்ந்த கடிதங்களில், இனி ஆல் இந்தியா ரேடியோ என்று பயன்படுத்தக்கூடாது என்றும், அதற்கு மாற்றாக ஆகாஷ்வாணி என்று தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கும். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், All India Radio என்ற பயன்பாட்டிற்குப் பதிலாக 'ஆகாஷ்வாணி' எனக் குறிப்பிடுமாறு வானொலி நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதற்குப் பதிலாகத் தொடர்ந்து 'அகில இந்திய வானொலி' என்றே பயன்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.