மணிப்பூர் நிலவரம் முதல் முதல் முடிசூடிய மூன்றாம் சார்லஸ் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 6, 2023

By செய்திப்பிரிவு

பிரிட்டன் மன்னராக முடிசூட்டப்பட்டார் மூன்றாம் சார்லஸ்: பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் மகுடம் சூட்டப்பட்டார். 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, அவரது மூத்த மகனான சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவியேற்றார். சட்டத்தையும் இங்கிலாந்து திருச்சபையையும் நிலை நிறுத்துவேன் என்று அவர் உறுதிமொழி ஏற்றார். இதனைத்தொடர்ந்து தங்க அங்கி அணிவித்து அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மகுடம் சூட்டப்பட்டது. கையில் செங்கோலும் அளிக்கப்பட்டது. பிரிட்டனின் அரச அரியணையில் வயதான நிலையில் இருக்கும் ஒருவருக்கு மன்னர் மகுடம் சூட்டுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE