சர்வதேச பத்திரிகை சுதந்திர நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

By செய்திப்பிரிவு

சென்னை: உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்ர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"உலகப் பத்திரிகை சுதந்திர நாளில், பல்வேறு தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுப்படி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE