தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏடிஜிபி அபய்குமார் சிங் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் துறை தலைமையக ஏடிஜிபி ஜி.வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பாலநாக தேவி, காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஹெச்.எம்.ஜெயராம், சென்னை காவல் துறை செயல்பாட்டு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE