ரூ.331 கோடியில் திருப்பணிகள், 2,000 கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1,000 - தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: "2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும்" என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்துசமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் திருக்கோயில்களில் கோபுரங்கள் மற்றும் விமானங்கள் இரவு நேரங்களில் பக்தர்கள் கண் குளிர, மனம் மகிழ ரூ.20.92 கோடியில் வண்ணங்கள் ஒளிரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் சேகர்பாபு
முதல்வரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் சேகர்பாபு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE