ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு: பாஜக மாநில பொதுச் செயலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் தமிழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளோம் என பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த கதிரவன் கடந்த மாதம் மாற்றப்பட்டு புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசும்போது, வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக மாவட்ட கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் தலைமை செய்யும். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவர்.

நிர்வாகிகள் கோரிக்கை: இத்தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழக பாஜக நிர்வாகிகள் பிரதமர் போட்டியிட வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ராமநாதபுரம் தமிழகத்தில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள தொகுதியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE