தமிழகத்தில் கனிமவள குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என்றும், அவ்வாறு செயல்படுவது கண்டறியப்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: மரக்காணம் தாலுகாவில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிம வளங்கள் உள்ளன. நல்முக்கல் மற்றும் கீழ்அருங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கனிம வள குவாரிகளை மாவட்ட நிர்வாகம் 5 முதல் 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.

குறிப்பாக, நல்முக்கல் கிராமத்தில் குவாரியை குத்தகைக்கு எடுத்தவர்கள் கடந்த 2019-ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைந்த பிறகும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான, அபாயகரமான வெடிபொருட்களை உபயோகித்து பாறைகளை உடைத்து வருகின்றனர். சட்டவிரோதமாக கனிம வளங்கள் அதிகாரிகளின் துணையுடன் கடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி இயங்கும் ஆலைகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, சட்டவிரோதமாக இயங்கி வரும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்டு குவாரிகள் செயல்படுகிறதா என்பதை கண்காணித்து குவாரிகளின் இயக்கத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றபொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது,அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளகுவாரிகள் எதுவும் செயல்படவில்லை. ஒருவேளை அவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பின் இந்த விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்