சுற்றுலா பயணிகளை கவர கொடைக்கானல் ஏரியில் செயற்கை மிதவை நீரூற்று

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மிதவை நீரூற்று சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கி உள்ளனர். இங்கு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் இடம் நட்சத்திர வடிவிலான ஏரி. இந்த ஏரியில் படகு சவாரி செய்யவும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி மற்றும் சைக்கிளிங் செய்யவும் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கொடைக்கானல் நகராட்சி சார்பில் ரூ.24 கோடியில் சுற்றுலா பயணிகளைக் கவர ஏரியை அழகுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

அதன்படி, ஏரியைச் சுற்றி 5 கி.மீ தொலைவுக்கு நடைபாதை சீரமைக்கப்படுகிறது. ஏரியில் உள்ள செடிகளை அகற்ற பிரத்யேக இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஏரி மேலே நடந்து சென்று படகு சவாரி செய்ய 160 அடி தூரத்துக்கு மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

3 நீரூற்றுகள் அமைப்பு: இந்நிலையில் ஏரியின் நடுவே மூன்று இடங்களில் செயற்கை மிதவை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது செயற்கை நீரூற்றுகள் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. இது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. ஏரியில் படகு சவாரி செய்யும் பயணிகள் நீரூற்று அருகே சென்று ஒளிப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இரவிலும் பார்த்துரசிக்கும் வகையில் செயற்கை நீரூற்றில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. இந்த செயற்கை நீரூற்று தொடர்ந்து இயக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 day ago

சுற்றுலா

3 days ago

சுற்றுலா

5 days ago

சுற்றுலா

7 days ago

சுற்றுலா

17 days ago

சுற்றுலா

17 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

21 days ago

சுற்றுலா

26 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

29 days ago

சுற்றுலா

1 month ago

சுற்றுலா

1 month ago

மேலும்