தி.மலை அண்ணாமலையார் கோயில் பிரம்ம தீர்த்த குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்துள்ளன.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பிரசித்திப் பெற்ற தீர்த்தங்களில் பிரம்ம தீர்த்தக்குளமும் ஒன்றாகும். இக் குளத்தில் சுவாமியின் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். கோயில் உள்ளே அமைந்துள்ள குளத்தில் மீன்கள் வளர்ந்து வருகின்றன. குளத்தில் மீன்கள் துள்ளி குதிப்பதை சிறுவர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்நிலையில், பிரம்ம தீர்த்தக் குளத்தில் இருந்த நூற்றுக் கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் நேற்று மிதந்துள்ளன. மேலும் துர்நாற்றம் வீசத் தொடங் கியது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மீன்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் உயிரிழந்த மீன்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE