சென்னை: இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுமுடிவுகள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான காவலர் பொதுத் தேர்வுக்கான அறிவிப்புகடந்த ஆண்டு ஜூன் 30-ல் வெளியிடப்பட்டது.
15,718 பேர் பங்கேற்பு
இத்தேர்வுக்கு 3 லட்சத்து66,728 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எழுத்துத் தேர்வு கடந்தஆண்டு நவ.27-ல் நடைபெற்றது.சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி தேர்வுக்கு 18,672 பேர்அழைக்கப்பட்டனர். கடந்த பிப்.6முதல் 11-ம் தேதி வரை நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வுகளில் 15,718 பேர் கலந்து கொண்டனர். இத்தேர்வு முடிவுகள் இன்று(மார்ச் 29) வாரியத்தின் இணையதளமான http://www.tnusrb.tn.gov.in/-ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago