ஈரோட்டில் மோடி 16-ல் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து, மொடக்குறிச்சியில் நடந்த பிரச்சாரத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:

இந்த தேர்தலில் தேச விரோதிகளை வெற்றி பெற வைக்கக் கூடாது. நாட்டை பாதுகாக்க, நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, வரும் 16-ம் தேதி ஈரோட்டில் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் பங்கேற்கிறார். மோடியை வெற்றி பெற வைக்க கட்சி வித்தியாசம் பார்க்காமல், வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE