ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை | அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்திற்கு வந்துள்ளார். அவருடன் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி தேர்தல் முடிவுகளை மு.க.ஸ்டாலின் அறிந்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE